×

அனல் பறக்கும் பிரச்சாரம்; ஏப்.9ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்: தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 9ம் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் பிரசாரம் செய்து வருகிறார். அதே போல் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.

மேலும் பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய தலைவர்களின் பார்வையும் தற்போது தமிழ்நாடு பக்கம் திரும்பியுள்ளது. அதாவது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி 5 தடவை தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அதாவது கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுக்கூட்டங்களிலும் பேசினார். கோவையில் ரோடு ஷோவிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 9ம் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் சென்னையின் 3 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார். சென்னை பாண்டி பஜார் பகுதியில் பிரதமர் வாகன பேரணியிலும் பங்கேற்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் என கூறினார்.

The post அனல் பறக்கும் பிரச்சாரம்; ஏப்.9ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்: தமிழிசை சவுந்தரராஜன் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Tamilisai Soundararajan ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,DMK ,Minister ,Udayanidhi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காங். தலைவர்...